சனி, 2 ஜூன், 2012

தமிழ்நாட்டில் வெள்ளி இடைநகர்வு 2012 ஜூன் 6

Please install latest Flash Player to run SunAeon Venus Transit 2012

வெள்ளி இடைநகர்வு 2012 - ஓர் அபூர்வ வான் நிகழ்வு


தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
வெள்ளி இடைநகர்வு 2012 - ஓர் அபூர்வ வான் நிகழ்வு
நம்வாழ்வின் கடைசி வாய்ப்பு
நாம் அனைவரும் இவ்வருடம் ஜூன் 6ம் தேதி வெள்ளி இடைநகர்வு எனும் ஓர் அபூர்வ வான்நிகழ்வைக் காண இருக்கிறோம். வெள்ளிக் கோளானது சூரிய தட்டின் வழியே ஒரு புள்ளி போன்று நகர்ந்து செல்வதையே வெள்ளி இடைநகர்தல் (Transit of Venus) என்கிறோம்.
            2004ம் ஆண்டு ‘வெள்ளி இடைநகர்வு” உலகம் முழுவதிலும் பொதுமக்கள் பலரால் பார்கப்பட்டது. 121 வருடங்கள் கழித்து நடந்த இந்நிகழ்வை தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆயிரக்கணக்கான மாணவர்களையும் மக்களையும் காணச்செய்தது. இதன்பிறகு டிசம்பர் 2117ல்தான் நிகழும். எனவே தற்போதுள்ள தலைமுறையினர் யாரும் ஜூன் 6 நிகழ்விற்குப்பின் இதைக் காணமுடியாது. எனவேதான் இது ஓர் அரிய நிகழ்வாகிறது..
இந்நிகழ்வில் அப்படியென்ன முக்கியத்துவம் உள்ளது என்ற கேள்வி பலருக்கு எழலாம்.. இந்நிகழ்வின் மூலமே நமக்கும் சூரியனுக்கும் உள்ள தொலைவு எவ்வளவு என கணக்கிடப்பட்டது.
எப்போது காணலாம்?
                        இந்த நிகழ்வு ஐந்துகட்டங்களாக நடைபெறுகின்றது.
1.     வெள்ளி  நுழையும்முன் சூரியதட்டினை வெளிப்புறமாக தொடுதல்
2.     வெள்ளி முழுவதுமாக சூரியதட்டினுள் சென்றுவிடுதல்
3.     வெள்ளி நகர்வின் மையப்பகுதி
4.     வெள்ளி வெளியேறும் முன் சூரியதட்டின் உட்புறத்தைத் தொடுதல்
5.     முழுவதுமாக வெளியேறிவிடுதல்.
சென்னையில் இந்த ஐந்து கட்டங்கள் தெரியும் நேரங்களைக் கீழே காணவும்.


தமிழ்நாட்டின் தெற்கே செல்லச் செல்ல அதிகபட்சமாக 15 வினடிகள் வரை இந்நேரங்கள் தாமதமாகலாம். முதல் இரண்டுநிகழ்வுகளும் தமிழ்நாட்டில் சூரியோதயத்திற்குமுன் நடப்பதால் நம்மால் காண இயலாது. சூரியன் உதித்ததிலிருந்து (காலை 5.41 மணி முதல்) கடைசி  நிகழ்வுவரை நம்மால் காண இயலும்.

வெள்ளி இடைநகர்வு தெரிந்த / தெரியும்  வருடங்கள்
ஜுன்

1761
1769

2004
2012

2247
2255
டிசம்பர்
1631
1639

1874
1882

2117
2125


இந்நிகழ்வை எவ்வாறு காண்பது?
இந்நிகழ்வினைப் பார்க்க பின்வரும் முறைகளைப் பின்பற்றலாம்.
1.     சூரியகண்ணாடிகள் அல்லது வெல்டிங்கிலாஸ் மூலம் தொடர்து பார்க்காமல் சில வினாடிகள் மட்டும் பார்த்தல்,,
2.     சிறிய கையடக்கக் கண்ணாடி( எந்த வடிவமானாலும் சரி) மூலம் சூரிய பிம்பத்தை வட்டமாக தெரியுமாறு இருட்டறையின் சுவற்றில் வீழ்த்திப் பார்த்தல், செய்முறையை கீழே காணவும். 
3.     தொலைநோக்கி மூலம் பிம்பத்தை திரையில் வீழ்த்திப் பார்த்தல்.
எச்சரிக்கை! ஒருபோதும் சூரியனை நேரடியாகக் காணாதீர்! ஏனெனில் சூரிய ஒளி மற்றும் வெப்பம் நம் கண்ணிலுள்ள லென்சுகளால் குவிக்கப்பட்டு விழித்திரை நிரந்தமாக பாதிக்கப்படும். எனவே பார்வை வெகுவாகப் பாதிக்கப்படும்.

செய்முறை
தேவையான பொருட்கள்: சிறிய முகம் பார்க்கும் கண்ணாடி, சுமார் 1செ.மீ விட்டம்   துளையிட்ட அட்டை
1.     சிறிய கண்ணாடி (Pocket mirror) மூலம் சூரிய வெளிச்சத்தை இருட்டறையில் புள்ளிகளற்ற சமதளமான வெள்ளை சுவற்றிலோ அல்லது காகிதத்திலோ விழச்செய்யவும்.
2.     கண்ணாடியின் முன்பாக சுமார் ½ மீட்டர் தூரத்தில், துளையிட்ட அட்டையை கண்ணாடிக்கு செங்குத்தாக பிடிக்கவும்.அல்லது அதை இடைவெளி இல்லாது கண்ணாடியில் ஒட்டிவிடவும்.
3.     இப்போது சூரியனின் பிம்பத்தை இருட்டறையில் காணலாம். மேலும் அதில் சூரியபுள்ளிகளையும், வெள்ளி கோள் கடந்து செல்வதையும் காணலாம்.
4.     சூரிய பிம்பத்தின் விட்டம் 12-15 செ.மீ இருப்பதால் கரும்புள்ளியாகத் தெரியும் வெள்ளியின் விட்டம் 3.5 – 4.5 மி.மீ இருக்கும்.
குறிப்பு:
1.     15 செ.மீ விட்டம் உள்ள பிம்பம் தெரிய வேண்டுமானால் 15மீ (50 அடி) தூரத்திலிருந்து கண்ணாடி மூலம் சூரிய ஒளியை பிரதிபலிக்கச் செய்யவேண்டும். அதாவது X செ.மீ விட்டம் உள்ள பிம்பம் வேண்டுமெனில் X தூரத்திலிருந்து கண்ணாடியை பிரதிபலிக்கச் செய்ய வேண்டும்.
2.     விட்டம் பெரியதாக ஆக, பிம்பத்தின் வெளிச்சம் குறைந்து கொண்டே வரும்.
3.     பிம்பத்தினை ஒரு வரைபடத்தாளில் (graph Sheet) விழச்செய்து, சூரியன் மற்றும் வெள்ளியின் பிம்பங்களை ஒரே நேரத்தில் வரைந்தால், வெள்ளியைவிட சூரியனின் பிம்பம் எத்தனை மடங்கு பெரியதாக இருக்கிறது எனக் கணக்கிடலாம்.

பாதுகாப்பான முறையில் இந்த அரியநிகழ்வை தாங்கள் ஜூன் 6 அன்று காண தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வாழ்த்துக்கள்!

வெள்ளி இடைநகர்வு 2012, ஜூன் 6.

புதுக்கோட்டை: ""வரும் ஜூன் ஆறாம் தேதி வானில் நடக்கும் வெள்ளி இடைநகர்தலை வெறும்கண்ணால் பார்ப்பது ஆபத்து,'' என்று கல்பாக்கம் அணுமின் நிலைய விஞ்ஞானி எச்சரித்துள்ளார்.

வானில் அபூர்வமாக நடக்கும் நிகழ்வுகளில் வெள்ளி கோளானது சூரியனுக்கும், பூமிக்கும் நடுவே நகர்ந்து செல்லும், வெ ள்ளி இடைநகர்தல் ஆகும். கடந் த 400 ஆண்டுகளில் வெள்ளி இடைநகர்தல் நிகழ்வு 53 முறை நடந்துள்ளது. கடைசியாக கடந்த 2004ம் ஆண்டு வெள்ளி இடைநகர்தல் நிகழ்வு நடந்தது.
இப்படிப்பட்ட அபூர்வ நிகழ்வானது, அடுத்த முறை 105 ஆண்டுக்கு பின் தான் ஏற்படவுள்ளது. ஆகையால், தற்போதுள்ள தலைமுறையினர் யாரும் அடுத்தமு றை பார்க்க முடியாத அபூர்வமா ன நிகழ்வாக, வெள்ளி கோள் இ டைநகர்தல் பார்க்கப்படுகிறது.
தலைமுறை தாண்டிய அபூர்வ நிகழ்வை, அனைத்து தரப்பு மக்களும் பார்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த, தமிழ்நாடு விழிப்புணர்வு இயக்கம் நேற்று முன்தினமும், நேற்றும் மாநில அளவிலான பயிற்சி பட்டறையை புதுக்கோட்டையில் நடத்தியது.
இதில், 50க்கும் மேற்பட்ட பயிற்றுனர்கள் பங்கேற்றனர். அந்த பயிற்சி பட்டறை நிறைவு விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற கல்பாக்கம் அணுமின் நிலைய விஞ்ஞானி பார்த்தசாரதி, தேசிய அறிவியல் தொழில்நுட்ப பிரச்சார குழு உறுப்பினர் ராமலிங்கம், அறிவியல் பிரச்சார மாநில ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:
வரும் ஜூன் ஆறாம் தேதி காலை ஆறு மணி முதல் 10.40 மணி வரை இந்தியாவில் உள்ளவர்கள் வெள்ளிகோள் இடைநகர்தலை காணலாம். அதை வெறும் கண்ணில் பார்ப்பது ஆபத்தானது. விழித்திரை நிரந்தரமாக பாதிக்கும். சூரியனையே வெறும் கண்ணால் பார்க்கக்கூடாது.
டெலஸ்கோப் மூலம் சூரிய பிம்பத்தை தரையில் வீழ்த்தி வெள்ளி இடைநகர்தலை பார்க்கலாம். வெல்டிங் கிளாஸ் (எண் 14) மூலம் சிறிது நேரம் பார்க்கலாம். கண்ணாடி உதவியோடு அட்டையிலான நுண்துளை கேமரா மூலம் சூரிய பிம்பத்தை திரையில் வீழ்த்தி பார்க்கலாம்.
சிறிய கையடக்க கண்ணாடி மூலம் சூரிய பிம்பத்தை வட்டமாக தெரியுமாறு இருட்டறையில் வீழ்த்தி பார்க்கலாம். இவைதவிர வேறு எந்த வகையிலும் வெள்ளி இடைநகர்தலை பார்க்கக்கூடாது.
இந்த அபூர்வ நிகழ்வை பார்ப்பது தொடர்பான அறிவியலுக்கு புறம்பாக வெளியாகும் வதந்திகளை நம்பவேண்டாம். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வெள்ளி இடைநகர்தல் அபூர்வநிகழ்வை பார்ப்பது குறித்து மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யவுள்ளது.
மாநிலம் முழுவதும் 150 முதல் 200 வரையிலான டெலஸ்கோப் அமைத்து பார்க்கும் வசதியும் ஏற்படுத்தப்படுகிறது. தற்போது பயிற்சி பெற்ற பயிற்றுனர்கள் ஒன்றிய அளவில் 1,500 பேருக்கு பயிற்சிமுகாம் நடத்தி, அவர்கள் மூலம் மாநிலம் முழுவதும் வெள்ளி இடைநகர்தலை பார்ப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

நன்றி: தினமலர்