சனி, 2 ஜூன், 2012

வெள்ளி இடைநகர்வு 2012, ஜூன் 6.

புதுக்கோட்டை: ""வரும் ஜூன் ஆறாம் தேதி வானில் நடக்கும் வெள்ளி இடைநகர்தலை வெறும்கண்ணால் பார்ப்பது ஆபத்து,'' என்று கல்பாக்கம் அணுமின் நிலைய விஞ்ஞானி எச்சரித்துள்ளார்.

வானில் அபூர்வமாக நடக்கும் நிகழ்வுகளில் வெள்ளி கோளானது சூரியனுக்கும், பூமிக்கும் நடுவே நகர்ந்து செல்லும், வெ ள்ளி இடைநகர்தல் ஆகும். கடந் த 400 ஆண்டுகளில் வெள்ளி இடைநகர்தல் நிகழ்வு 53 முறை நடந்துள்ளது. கடைசியாக கடந்த 2004ம் ஆண்டு வெள்ளி இடைநகர்தல் நிகழ்வு நடந்தது.
இப்படிப்பட்ட அபூர்வ நிகழ்வானது, அடுத்த முறை 105 ஆண்டுக்கு பின் தான் ஏற்படவுள்ளது. ஆகையால், தற்போதுள்ள தலைமுறையினர் யாரும் அடுத்தமு றை பார்க்க முடியாத அபூர்வமா ன நிகழ்வாக, வெள்ளி கோள் இ டைநகர்தல் பார்க்கப்படுகிறது.
தலைமுறை தாண்டிய அபூர்வ நிகழ்வை, அனைத்து தரப்பு மக்களும் பார்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த, தமிழ்நாடு விழிப்புணர்வு இயக்கம் நேற்று முன்தினமும், நேற்றும் மாநில அளவிலான பயிற்சி பட்டறையை புதுக்கோட்டையில் நடத்தியது.
இதில், 50க்கும் மேற்பட்ட பயிற்றுனர்கள் பங்கேற்றனர். அந்த பயிற்சி பட்டறை நிறைவு விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற கல்பாக்கம் அணுமின் நிலைய விஞ்ஞானி பார்த்தசாரதி, தேசிய அறிவியல் தொழில்நுட்ப பிரச்சார குழு உறுப்பினர் ராமலிங்கம், அறிவியல் பிரச்சார மாநில ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:
வரும் ஜூன் ஆறாம் தேதி காலை ஆறு மணி முதல் 10.40 மணி வரை இந்தியாவில் உள்ளவர்கள் வெள்ளிகோள் இடைநகர்தலை காணலாம். அதை வெறும் கண்ணில் பார்ப்பது ஆபத்தானது. விழித்திரை நிரந்தரமாக பாதிக்கும். சூரியனையே வெறும் கண்ணால் பார்க்கக்கூடாது.
டெலஸ்கோப் மூலம் சூரிய பிம்பத்தை தரையில் வீழ்த்தி வெள்ளி இடைநகர்தலை பார்க்கலாம். வெல்டிங் கிளாஸ் (எண் 14) மூலம் சிறிது நேரம் பார்க்கலாம். கண்ணாடி உதவியோடு அட்டையிலான நுண்துளை கேமரா மூலம் சூரிய பிம்பத்தை திரையில் வீழ்த்தி பார்க்கலாம்.
சிறிய கையடக்க கண்ணாடி மூலம் சூரிய பிம்பத்தை வட்டமாக தெரியுமாறு இருட்டறையில் வீழ்த்தி பார்க்கலாம். இவைதவிர வேறு எந்த வகையிலும் வெள்ளி இடைநகர்தலை பார்க்கக்கூடாது.
இந்த அபூர்வ நிகழ்வை பார்ப்பது தொடர்பான அறிவியலுக்கு புறம்பாக வெளியாகும் வதந்திகளை நம்பவேண்டாம். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வெள்ளி இடைநகர்தல் அபூர்வநிகழ்வை பார்ப்பது குறித்து மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யவுள்ளது.
மாநிலம் முழுவதும் 150 முதல் 200 வரையிலான டெலஸ்கோப் அமைத்து பார்க்கும் வசதியும் ஏற்படுத்தப்படுகிறது. தற்போது பயிற்சி பெற்ற பயிற்றுனர்கள் ஒன்றிய அளவில் 1,500 பேருக்கு பயிற்சிமுகாம் நடத்தி, அவர்கள் மூலம் மாநிலம் முழுவதும் வெள்ளி இடைநகர்தலை பார்ப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

நன்றி: தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக